பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 மாணிக்கவாசகர்



௪௩. திருப்பொன்னூசல் (16) ௪௭. அச்சப்பத்து (35)
௪௪. திருத்தசாங்கம் (19) ௪௮. குலாப் பத்து (40)
௪௫.கோயில் மூத்த திருப்பதிகம் (21) ௪௯. திருப்படையெழுச்சி (45)
௪௬. கண்டபத்து (31) ௫0. யாத்திரைப் பத்து (45)
௫௧. திருப்படையாட்சி (49)

இங்ஙனம் அமைத்ததற்குக் காரணம் ஒன்றும் இல்லை. திருவாசகத்தையும் முன்னோர் எழுதியுள்ள குறிப்புகளையும் நான் பயின்றபொழுது எனக்கு ஏற்பட்ட அநுபவமே இங்ஙனம் எழுதுவதற்குக் காரணம். பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகளின் திருவாசக உரையைப் படித்த பிறகு 'திருப்படையாட்சி' என்ற பதிகமே அடிகள் இறுதியாகப் பாடியிருக்கலாமோ என்று என் மனம் கருதுகின்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் அநுபவத்திற்கும் ஈடுபாட்டிற்கும் ஏற்ப வெவ்வேறு விதமாகத் தோன்றுதல் கூடும். அச்சோபதிகம் இறுதியில் அமைந்திருப்பதும் பொருத்த மாகவே தோன்றுகின்றது.