பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்களில் அடிகள் 323



  காயத் துள்ளமு துறவூறநீ
    கண்டு கொள் ளென்று காட்டி 
  சேய மாமலர்ச் சேவடிக்கணஞ்
     சென்னி மன்னித் திகழுமே (581)
                    --சென்னிப், 5 

என்ற சென்னிப் பத்துப் பாடலாலும் இது வலியுறும். இன்னும்,

  நீதியே செல்வத் திருப்பெருங் துறையில் 
     நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே (456) 
                                    -அருட் 

என்னும் அருட்பத்துப் பாடற்பகுதியும்,

  போதலர் சோலைப் பெருந்துறையெம்
     புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப் 
  பேதங் கெடுத்தருள் செய்பெருமை
     அறியவல் லாரெம் பிரானாரே (593)
                                  -திருவார்த், 7 

என்ற திருவார்த்தைப் பாடற்பகுதியும்,

  நானேயோ தவஞ்செய்தேன்
     சிவாயகமஎனப் பெற்றேன் 
  தேனாயின் னமுதமாய்த்
     தித்திக்கும் சிவபெருமான் 
  தானேவந் தெனதுள்ளம்
     புகுந்தடியேற் கருள்செய்தான் 
  ஊனாரும் உயிர்வாழ்க்கை
     ஒறுத்தன்றே வெறுத்திடவே (555)
                      -திருவேசறவு-10

என்ற திருவேசறவுத் திருப்பாடலும்,

  உய்யுநெறி காட்டுவித்திட்
     டோங்காரத் துட்பொருளை 
  ஐயவெனக் ருளியவா
     றார்பெறுவார் அச்சோவே (654) 
                                  -அச்சோ-7