இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருளிச் செயல்களில் அடிகள் 323
காயத் துள்ளமு துறவூறநீ கண்டு கொள் ளென்று காட்டி சேய மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே (581) --சென்னிப், 5
என்ற சென்னிப் பத்துப் பாடலாலும் இது வலியுறும். இன்னும்,
நீதியே செல்வத் திருப்பெருங் துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே (456) -அருட்
என்னும் அருட்பத்துப் பாடற்பகுதியும்,
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப் பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லாரெம் பிரானாரே (593) -திருவார்த், 7
என்ற திருவார்த்தைப் பாடற்பகுதியும்,
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயகமஎனப் பெற்றேன் தேனாயின் னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே (555) -திருவேசறவு-10
என்ற திருவேசறவுத் திருப்பாடலும்,
உய்யுநெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை ஐயவெனக் ருளியவா றார்பெறுவார் அச்சோவே (654) -அச்சோ-7