இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
326 மானிக்கவாசகர்
என்ற அச்சோபதிகத் திருப்பாடல் பகுதியும் தெளிவாக்கி யுள்ளன.
திருப்பெருந்துறையில் அடிகளுக்கு ஆசிரியத் திருமேனி கொண்டு உபதேசித்தது திருவைந்தெழுத்து என்று நம்பி தம் திருவிளையாடலில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடிகளின்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க -சிவபு. அடி. 1 எனவும்,
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் (553) -திருவேசற. 10 எனவும்,
என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் எனவும், ஓங்காரத் துட்பொருளை ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே (65:4) -அச்சோ-7 எனவும,
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் -திருச்சத. 27
எனவும் வரும் திருவாசகப் பாடற்பகுதிகள் திருவைந்தெழுத்துபதேசத்தின் சிறப்பினை வற்புறுத்தலைத் தெளியலாம். இருவினைகளால் நேரிடும் இன்பதுன்பங்கள் இரண்டையும் ஒருபடித்தாக எண்ணி-அதாவது இன்பத்தில் விருப்பமும் துன்பதில் வெறுப்பும் கொள்ளாது இரண்டையும் சமமாக எண்ணி-பழகும் நிலையே இரு வினையொப்பு.