பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 மாணிக்கவாசகர் விச்சுக் கேடு பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய் இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் (85) -திருச்சத-81 என்ற திருச்சதகப் பாடற் பகுதியாலும், புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு பெறவே வல்லே னல்லா வண்ணம் பெற்றேன்யான் அறவே கின்னைச் சேர்ந்தவடியார் மற்றொன் றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே கின்தாள் சேர்ந்தாரே (90) -டிெ. 86 (சிறவு - சிறப்பு மற்றொன்று பொய்) என்ற திருச்சதகப் பாடலாலும் ெ தளிவாக்கியுள்ளார். இறைவனது பிரிவாற்றாது உயிர் துறந்த மெய்யடியார் கட்கு அம்மையப்பராகத் தோன்றி அருள் வழங்கிய திறத்தையும், அத்தகைய பேரன்பர்களாகிய அடியார் களைப் பிரிந்தமையால் தாம் கண்கெட்ட ஊரெருது போன்று அல்லல் பட்டு உழலும் அவல நிலையையும், ... . . போரே றேகின் பொன்னகர்வாய் கீபோக் தருளி யிருள்நீக்கி வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள அருள் பெற்ற சிரே றடியார் கின்பாதம் சேரக் கண்டும் கண்கெட்ட ஊரே றாயிங் குழல் வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே (57) -திருச்சத. 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/360&oldid=864482" இலிருந்து மீள்விக்கப்பட்டது