பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 மாணிக்கவாசகர் எனவரும் திருவாசகத் தொடர்களில் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளார். ஆன்மா இங்ங்னம் சிவத்தோடு ஒன்றியைந்து சிவமாகிய நிலையிலும் இறைவனுக்குரிய ஐந்தொழில் இயற்றல் முதலியவற்றைச் செய்யாததாய் அம்முத்தி நிலையிலும் இறைவனுக்கு அடிமையாய் சிவாதுபவம் ஆகிய நுகர்ச்சியொன்றிற்கே உரியதாய் 'சிவமாக்கி என்ற அளவில் அமையாது 'எனையாண்ட என அடிகள் விதந்து கூறும் சொற்குறிப்பால் இனிது புலனாகும். இமைப்பொழுதும் என்னெஞ்சின் நீங்காதான் தாள்வாழ்க. -சிவபு-2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/390&oldid=864519" இலிருந்து மீள்விக்கப்பட்டது