பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் .99 ளாகிய பூத்தும் காய்க்காத மரங்களும், பூவாது காய்க்கும் மரங்களும் யாவை என்பது அடுத்து விளக்கப்படும். பூவாதும் காய்க்கும் மரங்களும் - பூத்தும் காயா மரங்களும் 1.1.1 இலக்கியச் சான்று பூக்காமலே காய்க்கும் மரங்களும் உள்ளன; நல்லன. அறிந்து நன்கு ஒழுகுபவர்களும் நல்லறிவு நூல் வல்லவர் களும், மூவாத இளைஞராயிருப்பினும், மூத்த தகுதியின ராவர்; மக்கள் செயற்கையாக விதைக்காமலே, இயற்கை யாக முளைக்கும் விதைகளும் உள்ளன; மேதைக்கு ஒருவரும் உரைக்காமலே நல்லுணர்வு தோன்றும். இவற்றிற்கு எதிர் மாறாக, பூத்தாலும் காய்க்காத மரங்களும் உள்ளன; நல்லன அறியாரும் நல்ல நூல் அறிவு பெறாதாரும், அகவை முதிர்ந்திருப்பினும், மூத்தவர்க்கு உரிய தகுதியினைப் பெற்றவராகார்; பாத்தியில் நட்டாலும் முளைக்காமல் கெட்டுப்போகும் விதைகளும் உண்டு; பேதைக்கு எவ்வளவு உரைத்தாலும் நல்லுணர்வு தோன்றாது. இக்கருத்துகள் அமைந்த பாடல்கள், சங்க காலஞ் சார்ந்த பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் உள்ளன. அவையாவன: 'பூவாது காய்க்கும் மரமுமுள. நன்றறிவார் மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா விதையாமை நாறும் வித்துள, மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு'. (22) 'பூத்தாலும் காயர் மரமுமுள. நன்றறியார் மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் - பாத்திப் புதைத்தாலும் நாறா வித்துள, பேதைக்கு உரைத்தாலும் செல்லா துணர்வு' (23)