பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பின் முன்னுரை ஆங்கில ஆதிக்கத்தையும் ஆட்சியையும் ஒரு சேர எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்த வீரப்பெருமக்கள் மருது பாண்டியர்கள். அதிலும் ஆங்கில ஆட்சி கருநாடகத்தில் சட்டப்படி வேரூன்றிய வேளையில் அக்கொடுங்கோலை முறித்தெறியும் முயற்சியில் முன்னின்று தங்கள் மூச்சை முடித்துக் கொண்ட பெருமை மருது பாண்டியர் தனியுரிமை. அச்சான்றோர்களின் வரலாற்றைக் கூறும் 'மருதிருவர் என்னும் இவ்வாராய்ச்சி நூல், இந்த ஆண்டு விடுதலை நாளை ஒட்டி இரண்டாம் பதிப்பாக வெளிவருவது தமிழ் மக்கட்கு மகிழ்ச்சி தருவதாகும். இப்பதிப்பில் பல புதிய செய்திகளும் படங்களும் இடம் பெற்றுள்ளன. 'மருதிருவர் இரண்டாம் பதிப்பும் பிழையின்றி அச்சேறப் பெருந்துணை புரிந்த மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் திருவடிகள் என் தலை மேலன. என் பிற நூல்களைப் போலவே இந்நூலையும் அழகுற அச்சிட்டு உதவிய முத்தமிழ் அச்சகத்தார்க்கு என் மனங்கனிந்த நன்றி உரியது. வாழ்க இந்திய விடுதலை வாழ்க மருது பாண்டியர் புகழ்!! ந. சஞ்சீவி