இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம்
புனல்சோர அளகம்சோர
வேறான துகில்தகைந்த கைசோர
மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா
என்று அரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற உடல்புளகித்து
உள்ளமெலாம் உருகினாளே.