பக்கம்:மாபாரதம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மாபாரதம்


அவனால் அதற்கு மேல் அடங்கி இருக்க முடிய வில்லை. அவள் கைகளைத் தொட்டுப் பிடித்தான். பின் அவளைத் தனிமையில் கட்டி அணைத்தான், அத்தான் என்று அவளைச் சொல்ல வைத்தான். அவர்கள் உள்ளத்தால் ஒன்று பட்டனர். அதனைக் கள்ளத்தால் வெண்ணெய் உண்ட மாதவன் அறிந்தான்.

அருச்சுனனின் தெய்வத் தந்தையாகிய இந்திரனும், கண்ணனும் முன் நின்று இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். பலராமன் இருந்தால் தடை செய்வான் என்பதால் பலராமனையும் அவனுக்கு வேண்டியவர்களை யும் மகரத்தீபம் என்னும் இடத்திற்குச் சிவனுக்கு எடுக்கும் விழாவைக் காண்பதற்குக் கண்ணன் அழைத்துச் சென்று விட்டான். அவர்களை அங்கு விட்டு வைத்து இவன் மட்டும் வந்திருந்து முன் இருந்து முகூர்த்தத்தை முடித்து வைத்தான்.

வந்த பிறகு அருச்சுனன் சுபத்திரையை மணந்த கதை யைச் சொல்லி ஒன்றும் அறியாதவன் போல் நடித்தான். அதற்குள் அவர்களைத் தேரில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டான், பலராமன் படையுடன் சென்று எதிர்த்துத் தடுத்தான். சுபத்திரை தேர் ஒட்ட யாதவப்படைகளைச் சொந்த ஊருக்குத் திரும்பப் போய் அடங்கி இருக்க அருச்சுனன் துரத்தி அடித்தான்.

தீர்த்த யாத்திரை முடிந்தது இவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தாய் குந்திமுன் வெளிநாடு சென்று திரும்பி வந்ததற்கு அடையாளமாகப் பாத்திரம் ஒன்று கைப்பற்றி வந்து சேர்ந்தான். கோயில் தலங்கள் சென்று வழிமட்டதும், ஒய்வு கிடைக்த போது மடந்தையர் மூவரை மணந்ததையும் சொல்லி மகிழ வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/97&oldid=1036099" இலிருந்து மீள்விக்கப்பட்டது