பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

233

ஆரோக்கியமாக இருக்கும். ஒவ்வொருவரும் தொண்ணுறு வயசு, நூறு வயசு இருந்து எள் பேரன் கொள் பேரன்களைக் கண்டு இறந்து போயிருக்கிறார்கள். இந்தக் காலத்து மனிதர் தங்களுடைய சொந்தப் பிள்ளைகள் தலையெடுப்பதற்குள் இறந்து போய்விடுவார்கள். அப்படிப்பட்ட மாறுதல் இப்போதைக்கு சுமார் இருபது வருஷகாலமாகத்தான் ஏற்பட்டிருக்கிறது. காப்பி முதலிய உணவுகள் பரவியும் அவ்வளவு காலந்தான் ஆகிறது. இதோ உங்களுடைய உதாரணத்தையே பாருங்கள். உங்களுக்கு இப்போது பதினாறு அல்லது பதினேழு வயசிருக்கலாம். நீங்கள் தேகத்துக்கு உழைப்பே கொடுக்காமல் மூளைக்கு மாத்திரம் உழைப்பைக் கொடுப்பதோடு, நம்முடைய பூர்வீகர்கள் உண்டு வந்த உணவுகளை எல்லாம் விட்டு, அன்னிய வஸ்துக்களை உண்பதால், உங்கள் உடம்பு எப்படி இருக்கிறதென்று பாருங்கள். ஆகாரத்தைக் காணும்போதே உங்களுடைய முகம் ஒருவித அருவருப்பைக் காட்டுகிறது. உடம்பில் சதைப்பிடிப்பு என்பதே காணப்படவில்லை. இதற்கு முன் இருந்த நம்முடைய நாட்டு ஸ்திரீகள் நிரம்பவும் திடசாலிகளான குழந்தைகளாய் சுமார் பத்துக்குக் குறையாமல் பெற்று வெகு காலம் வரையில் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு குழந்தை பெறுவதற்குள் குடுகுடு கிழவியாய் விடுவீர்கள் என்பது நிச்சயம். ஆனால் அதை எல்லாம் நான் சொன்னால், நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். இன்னொரு விதமாக வாதிக்கவும் ஆரம்பிப்பீர்கள். ஒவ்வொருவரும் மிதம் இல்லாமல் பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பெற்று விட்டதால்தான் நம்முடைய தேசத்தின் ஜனத்தொகை அபாரமாகப் பெருகி விட்டது என்றும், நம்முடைய நாட்டு சாமான்களின் விலை வாசிகள் எல்லாம் அதிகரித்து விட்டன என்றும் ஒருவேளை சொன்னாலும் சொல்வீர்கள் ஆகையால், அதைப் பற்றி நாம் வீண் வாக்குவாதம் செய்வது நல்லதல்ல. முக்கியமாக இந்த பிஸ்கோத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது சீமையில் இருந்து வந்திருக்கிறது என்பது ஒன்றே நமக்குத் தெரிகிறது. ஆனால் அவ்விடத்தில் இதை எவன் செய்தான்