பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

மாயா விநோதப் பரதேசி

என்பதை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விலக்க முடியாத ஒரு விருப்பம் தோன்றி வருத்தியது ஆகையால், அந்தப் பெட்டியில் உள்ள ஜெந்து என்னை உபத்திரவிக்காமல், அதை நான் எப்படி உடைத்துப் பார்க்கிறது என்று யோசனை செய்தேன். தண்ணி நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் அந்தப் பெட்டியை அழுத்தி அதை உடைத்துப் பார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றியது. உள்ளே இருப்பது பாம்பாக இருந்தால் அது ஒருவேளை தண்ணீரில் நீந்தி வெளியில் வந்து விடுமோ என்ற நினைவு உண்டானது ஆகையால், நான் வேறோர் உபாயம் செய்தேன். அந்தப் பெட்டியைத் தோட்டத்தின் பின் புறத்தில் எவரும் இல்லாத தனியான ஓரிடத்தில் கொண்டு போய் வைத்து, அதைச் சுற்றிலும் சக்கர வட்டமாக நாலைந்து கட்டு விறகுகளை வைத்து நெருப்பைப் போட்டுக் கொளுத்தித் தனலாக்கி, நெருப்புத் தணலைக் கரைபோலப் பெட்டியைச் சுற்றி அனைத்து வைத்துக் கொண்டு நான் நெருப்புக்கு வெளியில் நின்று ஒரு கடப்பாறையால் பெட்டியை அடித்து உடைத்தேன். மேலே மூடப்பட்டிருந்த காகிதம் போனவுடன் உள்புறத்தில் மூங்கில் பெட்டி ஒன்று காணப்பட்டது. அதன்மேல் கடப்பாறையில் இரண்டொரு குத்துகள் குத்த பெட்டியின் மேல்பக்கம் பொத்துப் போயிற்று. உடனே உள்பக்கத்தில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக நான்கு கரு நாகங்கள் புஸ் புஸ் என்று சீறிக் கொண்டு கிளம்பி வெளியில் பாய்ந்து அங்கும் இங்கும் ஒடத்தலைப்பட்டன. அவற்றைச் சுற்றிலும் நெருப்புத் தனலினால் கரைகட்டப்பட்டிருந்தது ஆகையால், அதைக் கடந்து வெளியில் வர மாட்டாமல் அந்தச் சக்கர வட்டத்திற்குள்ளாகவே அங்கும் இங்கும் தாறுமாறாக ஓட ஆரம்பித்தன. நான் என் கையில் இருந்த கடப்பாறையால் உடனே அந்தப் பாம்புகளை எல்லாம் அடித்துக் கொன்று தோட்டத்திற்கு வெளியில் துக்கி எறிந்து நெருப்புத் தணலையும் அனைத்துவிட்டு பங்களா விற்குள் வந்து, என் சம்சாரத்தை மாத்திரம் கூப்பிட்டு, நடந்த வரலாற்றை எல்லாம் தெரிவித்தேன்.

கண்ணப்பா:- என்ன ஆச்சரியம் இது மனிதர் இப்படிப்பட்ட அட்டுழியம் செய்யத் துணிவார்களா? தாங்கள் நிரம்பவும் முன் யோசனையோடு இருந்தபடியால் தப்பித்துக் கொண்டீர்கள். வேறே யாராக இருந்தாலும், அவசரப்பட்டுக் கொண்டு