பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

33

மிராசுதார்களும் இல்லாமலா போய்விட்டார்கள். அவர்கள் வீட்டிலெல்லாம் பெண்கள் இவ்வளவு மோசமாக இல்லை. பிழையெல்லாம் புருஷர் மேல் தான் இருக்கிறதென்று நான் துணிந்து சொல்வேன். உன்னை யார் வேலைக்காரர்களை நியமிக்கச் சொல்லுகிறார்கள்? நீயே வேலைக் காரர்களை நியமிக்கிறாய். பிறகு பெண்ஜாதி வேலை செய்ய வில்லை என்றும், உபசாரம் செய்யவில்லை என்றும், நீ சொல்வதில் என்ன உபயோகம்? பெண்களைச் சோம்பேறியாக்கி உட்காரவைத்துக் கெடுப்பதற்கு நீயே உத்தரவாதி. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்வது போல, நீ வெள்ளைக் காரரைப் பார்த்து, அவர்கள் ஆயாக்களை வைக்கிறார்கள் என்று நீயும் வைக்கிறாய். அப்படிச் செய்தால்தான் பெரிய கெளரதை ஏற்படும் என்று எண்ணுகிறாய். இது போலிப் பெருமையே அன்றி வேறல்ல. அல்லது, உன் மனைவி, உழைத்து வேலை செய்தால், அவளுடைய உடம்பு வெண்ணெய் போல உருகிப் போய் விடும் என்று நீ உன்னுடைய புதிய மோகத்தில் நினைத்து, அவளைக் கீழே விடாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைகிறாய். அவள் குனிவதற்கும் நிமிர்வதற்கும் வேலைக் காரிகளை வைக்கிறாய். அப்படிச் செய்துவிட்டு நீ அவர்கள் மேல் குறை கூறுவது நியாயமாகுமா? கிராமங்களில் உள்ள பெரிய மனிதர்களுடைய வீட்டில், மாமியார் பாட்டிமார் முதலிய பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லா விஷயங்களிலும் நல்ல வழிகாட்டி. சரியான பழக்க வழக்கங்களில் பயிற்றி பெண் உழைக்கவும் புருஷருக்குப் பணிவிடை செய்யவும் துண்டி காலக்கிரமத்தில் அவர்களை உத்தமமான ஸ்திரீகளாகச் செய்து விடுவார்கள். இப்போது உத்தியோகக் கொள்ளையில் ஒருவன் பரிட்சையில் தேறியவுடனே காஷ்மீரத்தில் அவனுக்கு ஒரு பெருத்த உத்தியோகமானால், அவன் உலக அதுபோகமில்லாத தன் பெண்ஜாதியை அழைத்துக் கொண்டு போய் தன்னரசு நாடாய் விட்டு, அவளிடம் குருட்டுப் பிரேமை வைத்து ஏராளமான வேலைக்காரர்களை நியமித்து, அவளை முற்றிலும் உபயோக மற்றவளாக்கி விடுகிறான். குழந்தைக்கு அஜிர்ணம் உண்டானால் கொஞ்சம் ஓமம் அரைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுகூட மா.வி.ப.i-4