பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

53



கோபாலசாமி:- (ஆநந்தமயமாக மாறி) ஓகோ, அப்படியா நீ ஒரு பெண்ஜாதியைச் சம்பாதிப்பதற்கு முன், முதலில் நீயே இன்னொருவனுக்குப் பெண்ஜாதியாக இருந்து அந்தச் சுகம் எப்படி இருக்கிறதென்று பார்க்கப் போகிறாயா?

கந்தசாமி:- ஆம். நான் ஒரு பெண்ணைப் போல விேஷம் போட்டுக் கொள்ளுகிறேன். என்னுடைய உட்ம்பு சிவப்பாய் இருப்பதால், பவுடர் முதலியவை வேண்டியதில்லை. தலைக்கு மாத்திரம் டோப்பா வைத்துக் கொண்டால் அதுவே போதும். நல்ல உயர்ந்த ஆபரணங்களையும், பனாரீஸ் புடவை, ரவிக்கை முதலியவைகளை நான் அணிந்து கொள்ளுகிறேன். என்னைப் பார்த்தால், யாரும் ஆண்பிள்ளை என்று சந்தேகிக்கமாட்டார்கள். நீ ஒரு பெரிய மனிதன்போல, நல்ல வேஷடி சட்டை முதலியவை அணிந்து கொள். ஒரு பெட்டி வண்டி அமர்த்திக் கொள்வோம். சனிக்கிழமை தினம், கலெக்டருக்குக் கச்சேரி உண்டு. ஆனால் அன்று பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும். தகப்பனார். கச்சேரிக்குப் போயிருப்பார். பெண் வீட்டில் இருப்பாள். நாம் இருவரும் பெட்டி வண்டியில் உட்கார்ந்து கொண்டு அவர்களுடைய பங்களாவுக்குள் வண்டியை விட்டுக் கொண்டு போவோம். டபேதார்கள் யார் என்று கேட்டால், நீ உடனே கீழே இறங்கி மன்னார் கோவிலில் உள்ள இவர்களுடைய புதிய சம்பந்தியம்மாளுக்கு நான் தங்கை என்றும், ! என்னுடைய புருஷன் என்றும், நாம் கோமளேசுவரன் பேட்டையில் இருக்கிறவர்கள் என்றும் ஒரு நடை வந்து பெண்னைப் — பார்த்துவிட்டு வரும்படி, மன்னார். இருந்து கடிதம் வந்திருக்கிறதென்றும், அதற்காக வந்திருக்கிறோம் என்றும் நீ சொல், நான் மாத்திரம் உள்ளே போய் ஐந்து நிமிஷ நேரம் இருந்து பெண்னோடு பேசிவிட்டு வந்துவிட உத்தேசிப்பதாக நீ அவர்களிடம் தெரிவி. அவர்கள் உடனே உள்ளே போய்சங்கதியைப் பெண்ணினிடம் செல்லுவார்கள். அவள் நம்முடைய வேண்டுகோளை மறுக்க முடியாது. அவள் நம்மை அழைத்துவரச் சொல்வாள். நீ வெளிப் பக்கத்தில், உட்கார்ந்து கொண்டிரு. நான் மாத்திரம் உள்ளே போய் அந்தப் பெண்ணைப் பார்த்து அவளோடு கொஞ்ச நேரம் பேசிக்