பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

11

சாமியார்:- இந்தப் போலீஸ் இலாகாவில் நான் உத்தியோகம் வகிப்பது, ஜீவனோபாயத்தின் பொருட்டல்ல என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். ஆனாலும் நான் எதற்காக இதை வகிக்கிறேன் என்றால், போலீஸ் இலாகா உத்தியோகஸ்தர்கள் சிப்பந்திகள் முதலியோருடைய உதவி நமக்கிருந்தால், அதனால், நான் பலருக்கு நன்மை செய்வதற்குத் தக்க வசதி ஏற்படும் என்பது என்னுடைய முக்கியமான கருத்து. அதுவுமன்றி, போலீசார் தப்பான வழியில் போகாமல் ஒழுங்கான வழியில் போய் ஜனங்களுக்கு உண்மையிலேயே உதவியாய் இருக்கும்படி நான் அவர்களை நல்ல வழியில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய இன்னொரு நோக்கம் ஆகையால், நான் இந்த உத்தியோகத்தை இன்னம் கொஞ்சகாலம் வகிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நான் நம்முடைய! ராஜதானியின் கவர்னருக்கும், போலீஸ் இலாகாத் தலைவருக்கும் ரகசியமான கடிதங்கள் இரண்டு எழுதித் தயாராக வைத்திருக்கிறேன். என் சம்சாரத்துக்கு நான் இங்கிலீஷ் பாஷை கற்றுக் கொடுத்து டைப் இயந்திரம் அடிக்கவும் பழக்கிக் கொடுத்திருக்கிறேன். அது எதற்காக என்றால், பரம ரகசியமான சில கடிதங்கள் எழுதி கவர்னர் முதலியவர்களுக்கு அனுப்ப வேண்டுமானால், அதற்காக என் சம்சாரத்தையே கொஞ்சம் பழக்கி வைத்திருக்கிறேன். நானே டைப் அடிப்பதென்றால், என் விரல்கள் கொஞ்சம் நடுங்குகின்றன. அதனால் அவளை அதில் பழக்கி இருக்கிறேன். இப்போது அவள் பக்கத்து அறையில் இருந்து கொண்டு என்னுடைய கடிதங்களை டைப் அடித்துத் தயாரித்துக் கொண்டிருக்கிறாள். அது சீக்கிரம் ஆக வேண்டும் என்று நான் சொன்னேன் ஆகையால், அந்த அவசரத்தில், அவள் உங்களோடு பேசாமல் உள்ளே போய்விட்டாள் போலிருக்கிறது. அதுவுமன்றி, அவள் உங்களோடு பேசினால், என்னைப் பாம்புகள் கடித்த வரலாற்றை நீங்கள் கேட்பீர்கள் அல்லவா. அப்போது அவள் உங்களிடம் பொய்யான வரலாற்றைச் சொல்ல இஷ்டப்படவில்லை. உண்மையான வரலாற்றை நானே உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நினைவோடும், தன் அவசர வேலையைக் கருதியும், அவள் உடனே அப்பால்