பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

மாயா விநோதப் பரதேசி

உங்களுக்கு நிரம்பவும் அலுப்பாக இருக்கும். மற்ற எல்லோரையும் எழுப்பி உட்கார வைத்து நீங்களும் உட்காருங்கள். நான் எல்லோருக்கும் இலை போட்டுப் பரிமாறுகிறேன். அலுத்துப் போயிருக்கும் நீங்கள் பலதடவை குனிந்து நிமிர்ந்து இத்தனை பேருக்கும் பரிமாறுவது கஷ்டமாக இருக்கும். அந்த வேலையை எனக்குக் கொடுத்துத் தான் தீர வேண்டும் என்று அந்தரங்கமான வாஞ்சையும், கணிகரமும் தோன்றக் கூற, அதைக் கேட்டு, முதலில் ஆட்சேபனையாகப் பேசிய விசாலாகூஜியம்மாள், முடிவில் நீலலோசனியம்மாளது சொல்லைத் தான் மீறி நடந்தால், அவளது பிரியம் தங்கள் மேல் ஏற்படாமல் போய்விடுமோ என்ற நினைவினால், அவளது மனப் போக்கின்படி செய்யவிட்டு நயவஞ்சக நடனம் புரியத் தொடங்கி னாள். உடனே ரமாமணியம்மாள், அவளது தந்தை, பக்கிரியா பிள்ளை, போயி, இடும்பன் சேர்வைகாரன் ஆகிய ஐவரும் போஜனத்திற்காக எழுப்பப்பட்டனர். எழுந்தவர்கள் கை கால்களைச் சுத்தி செய்து கொண்டு அவரவர்கள் எங்கெங்கு உட்காருவது முறைமையோ அதன்படி உட்கார்ந்து கொண்டனர். ரமாமணியம்மாளோடு விசாலாகூஜியம்மாளும் உட்கார்ந்து கொண்டாள். நீலலோசனியம்மாள் அளவற்ற ஊக்கமும் சுறுசுறுப்பும் தோற்றுவித்து அங்குமிங்கும் ஓடி ஓடி எல்லோருக்கும் இலைகள் போட்டு மிகுந்த அன்போடும் உவப்போடும் அன்னம் முதலிய சகலமான பக்குவ பதார்த்தங்களையும் எடுத்தெடுத்துப் பரிமாறி எல்லோரையும் திருப்திகரமாக உண்பித்தாள். எல்லோரும் போஜனத்தை முடித்துக் கொண்டு எழுந்து மூலைக் கொருவராய் உட்கார்ந்து தாம்பூலந் தரித்துக் கொண்டு, மறுபடியும் அங்கங்கே படுத்து மாலை நேரம் வரையில் சம்பாஷித்துக் கொண்டே இருக்க, விசாலாக்ஷியம்மாள் அப்படியே அயர்ந்து நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள். நீலலோசனியம்மாள் மற்றவரைப் போல அயர்ந்து தூங்காவிட்டாலும், இரண்டொரு நாழிகை நேரம் அப்படியே சோர்ந்து உறங்கியபடியே படுத்திருந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு விசாலாக்ஷியம்மாள் எழுந்து அன்றைய இராப்போஜனம் தயாரிப்பதில் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள். நீலலோசனியம்மாளும் எழுந்து விசாலாக்ஷியம்