பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

49

அன்னிய புருஷருக்கு அடிமையாய்ப் பொருள் தேடிவருவது இழுக்கல்லவா? இங்கிலீஷ் கற்று வெளியில் சென்று அன்னிய புருஷர்களோடு ஊடாடிப் பொருள் தேடும் ஸ்திரீகளையும் எடுத்துக் கொள்வோம். வீட்டிற்குள் இருந்து வீட்டுக் காரியங்களைச் செய்து புருஷருக்கு அடங்கி இருக்கும் ஸ்திரீகளையும் எடுத்துக் கொள்வோம். பெண்பாலாருடைய கற்பின் உறுதி கெடுவதற்கு இந்த இரண்டு நிலைமையில் எது அனுகூலமானதாக இருக்கிறதென்பது தானாகவே விளங்கிவிடும். ஆண்மக்களோ மூர்க்கமான ஆசாபாசங்களை உடையவர்கள். ஸ்திரீகளோ மெல்லிய தன்மை உடையவர்கள். காம விகாரம் என்பதோ கட்டில் அடங்காதது. ஸ்திரீகளுடைய கற்பிற்கு பங்கம் ஏற்படும் பட்சத்தில் உலகம் கலகத்திற்கே இருப்பிடமாய், மனிதர் ஒருவருக்கொருவர் கொலை செய்து மடிந்து போவது நிச்சயம் ஆதலால், உலகில் ஒழுங்காகவும், சச்சரவின்றியும் நடைபெறுவதற்கு, ஸ்திரீ புருஷர் ஒருவரை ஒருவர் நேரான வழியில் மணந்து கொண்டு வரம்பை மீறாமல் நடப்பதும், ஸ்திரீகள் தமது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளுவதும் அத்தியாவசியமான விஷயங்கள். அப்படி ஸ்திரீகள் தம்முடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்களது புருஷர்களும் அவர்களுக்கு உதவி புரிவது நிரம்பவும் முக்கியமான காரியம். அவர்கள் ஜீவனோபாயத்தைத் தேடி வெளியில் சென்று அன்னிய புருஷருக்கிடையில் உழன்று பலவிதக் கவர்ச்சிகளுக்கும் வஞ்சகங்களுக்கும் இலக்காகாமல் அவர்களை வீட்டிலேயே வைத்து அவர்களைப் பாதுகாப்பது ஆண்மக்களின் கடமை அல்லவா? நமது ஸ்திரீகளுக்கு வெளி உலகத்து விவரங்கள் எல்லாம் தெரியாமல் போனால், அதனால் பெரிய திங்கு ஏதாவது நேர்ந்து விடுமா? ஆழ்ந்து யோசித்துப் பார்க்கப் போனால், நாம் வெளி உலகத்து விஷயங்களை எல்லாம் நமது ஸ்திரீகளின் மனதில் புகுத்தி, அவர்களைத் துன்புறுத்தாது இருப்போமானால், அவர்கள் தங்களுடைய காரியங்களை அதிக திறமையோடும் நடத்துவார்கள் என்பது நிச்சயம். இங்கிலிஷ் காரரும் அவர்க ளுடைய ஸ்திரீகளும் இங்கிலீஷ் கற்காத நம்முடைய பெண்மக்கள் அடிமை நிலைமையில் இருப்பதாகவும்,மா.வி.பII-4