மரபும் மாற்றமும்
65
உலக வரலாறு குழப்பமான தொடர்பற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்றால், ஒழுங்கான இலக்கிய வளர்ச்சின்ன்பதே இருக்க முடியாது.
இது இன்று பல மேற்கத்திய எழுத்தாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து. சிக்கலான உலக நிகழ்ச்சிகளிலும் கலைப் படைப்புகளிலும் சரியான பாதை தெரியாமல் வழி தவறியவர்களின் கருத்து. இவர்கள் தங்களுடைய குருட்டுத் தனத்தையே, தங்களுடைய வல்லமையாகக் காட்டிக்கொள்கிறார்கள். தாங்களே சுய சிந்தனையுடையவர்கள். என்று நினைத்துக் கொண்டு, ஆகாயத்தில் பறந்துகொண்டு, தங்களுக்குக் கீழே நடைபெறும் சமுதாயப் போராட்டங்களைப் (கண்ணில்லாததால்) பார்க்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்போராட்டங்களிலிருந்து ஒதுங்கியிருப்பதில்லை. தங்களுடைய நம்பிக்கைகளை வலுவாகச் சொல்லுவதன் மூலம், முற்போக்குச் சக்திகளின் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.
மற்றொரு இலக்கியக் கொள்கையினர் நவீனத்துவவாதிகள். மேலை நாடுகளில் இவர்கள் ஏகபோக முதலாளித்துவத்தால் ஊக்க ஊதியங்கள் அளிக்கப்படுகிறார்கள். இத்தாலிய எழுத்தாளர் கைடோ பியோவீன் என்பவர்,
எனறும் எழுதினார்.
இம்மூவரையும் குறித்து அவர்களது இலக்கியப் படிைப்பு முறையை வானளாவப் புகழ்கிற விகோல்லி என்ற மற்றோர் இத்தாலிய எழுத்தாளர் முரண்பட்டு எழுதினார்:
32/5