பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்று சோஷலிஸ நாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளுக்குள்ளும், உலக அரங்கிலும் செய்துவரும் பணி என்ன?

இதுபோன்ற வினாக்களுக்கு இந்நூல் மார்க்ஸ். எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூவரது எழுத்துக்களிலிருந்தே விடைதர முயலுகிறது.

பொதுவாகத் தமிழ்நாட்டு இளைஞர்கள் மார்க்ஸியம் பற்றியும், தற்கால சமுதாய மாற்றங்கள் பற்றியும் அறிந்துகொள்ளப் பேரார்வம் கொண்டுள்ளார்கள். இத்தேவையை உணர்வதும், நிறைவேற்றுவதுமான முயற்சிகள் தேவைக்குப் போதுமானதாக இல்லை. இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை வகுப்புகளிலோ தனியாகவோ கற்பவர்களுக்கு ஒரு துணைநூலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எனது சொற்பொழிவுகளையும், எனது குறிப்புக்களையும் விரிவாக்கி எழுதி, மூன்று நூல்கள் வெளியிட நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் முதல் நூல் வெளிவருவதற்கு முன்னரே, தமிழ்நாட்டின் கிராமப்புற உழைக்கும் மக்களின் பண்பாட்டை, கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் உழைக்கும் மக்களின் பண்பாடுகளோடு ஒப்பிட்டு ஆராயும் பணியை சர்வதேசீய திராவிட மொழியியல் கழகம் என்னிடம் ஒப்படைத்துள்ளது. இப்பணிக்குரிய வசதிகளை அளிக்க தார்வாரிலுள்ள கர்நாடகப் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. எனவே 1978 டிசம்பர் மாதமுடிய் நான் கொண்டிருந்த திட்டத்தை நிறைவேற்ற இயலாது. அதன்பின் முயலுவேன்.

எனது நூல்களையெல்லாம் வெளியிட்டுவரும் நியூ செஞ்சுகி புக் ஹவுஸ் நிறுவனத்தார் இச்சிறு நூலையும் வெளி விடுகிரு.ர்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நா.வானமாமலை

தார்வார்,

8-2-76

vi