தம்மை மேம்படுத்தும் எண்ணிக்கன் 75
தர்க்கம் செய்யலாம்" என்று எழுதி கையொப்பமும் போட்டிருந்தார்.
1517-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் நாளன்று, விட்டென் பரீக் தேவாலயம் ஆராதனைக்கு மக்கள் வெள்ளம் போல் பெருகிக் கூடி விட்டார்கள்.
மார்ட்டின் லூதர் எழுதியிருந்த 95 நியாயக் குறிப்பு கள் ஆணியறைந்து ஒட்டப்பட்ட இடத்தில் ஒரே நெருக் கடி; மக்கள் பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்களைப் போல பரபரப்புடன் கூடி ஒருவரை ஒருவர் நெட்டி முட்டிப் படித்துக் கொண்டிருந்தார்கள்! - -
இலத்தீன் மொழி படியாத பொதுமக்களுக்கு, பல்கலைக்கழக மாண்வமணிகள் சிலர் அந்த நியாயக் குறிப்புக்களை ஜெர்மன் மொழியிலே மொழிபெயர்த்துத் தனித்தனி கூட்டங்களிலே கூறிக் கொண்டிருந்ததையும் கூடியிருந்தவர்கள் கேட்டார்கள்.
நேரமாக ஆக மக்கள் கூட்டம் பெருத்த ; அதனால் பல மாணவர்கள் தனித்தனிக் கூட்டமாக மக்களைக் குரல் கொடுத்து அழைத்து, அந்த நியாயக் குறிப்புக்களை ஜெர்மன் மொழியிலே கூறினார்கள்.
ஒரு மாணவன் கூடியிருந்த மக்களிடம் கனக்தக் குர லெடுத்துப் பேசிக் களைத்து விட்டான், அவன் இருந்த இடத்திலே வேறோர் மாணவன் வந்து அந்தப் பணி வினையே தொடர்ந்து செய்தான்்! இவ்வாறு பல தனிக் கட்டங்களில் ஆங்காங்கே குழுமி கேட்ட வண்ணமி நந் தார்கள் மக்கள்.
மக்கள் வெகு ஆர்வத்தோடும், கருத்தோடும், விழிப் புணர்வோடும், பரப்பரப்போடும் மாணவர்கள் மொழி பெயர்ப்புகளைக் கேட்டு, அதிர்ச்சியும், ஆச்சரியமும், இகைப்பும், திணறலுக்காகக் கூடியிருந்தார்கன்.