பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

மார்ட்டின் லூதர்



எதையும் எளிதில் நம்பும் இயற்கைக் குணமுள்ள சாதாரண மக்களுக்கு, மெய்யாகவே பொன்னா அல்லது மெருகிட்ட பித்தளையா, என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. புலியைப் பசுவென நம்பினர், புல்லையும் சேகரித்துக் குவித்தனர். புல்லைத் தின்று பழக்கமில்லாத புலி பராமரித்தது. அதிலும் ஓர் மகத்துவம் இருப்பதாகவே நினைத்து அதிசயப்பேரேட்டில் அதையும் சேர்த்து ஒரு கணக்கு எழுதிவிட்டனர்.

காட்டில் காய்ந்த நிலா, கடலில் பெய்த மழை, பாறையில் விதைத்த விதை, பயனளிக்காது போவதைப்போல, போப்பின் ஆசிர்வாகம் பொருளற்றது என்று தெரிந்துகொள்ள முடியாத மக்கள் வேறு என்னதான் செய்ய முடியும். பல நாட்கள் ஒளிந்து திரிந்த மிருகம் ஒரு நாள் வேடன் கை அம்புக்கு இரையாவதைப் போல, போப்பாண்டவர்களின் அக்ரமத்துக்குக் குழி தோண்டப்பட்டது.

1453 நவம்பர் 10-ந் தேதி, விதிக்கும் மதிக்கும் வித்தியாசம் தெரிய ஒட்டாமல் தடுத்த குருமார்களின் சதிக்குச் சவக்கிடங்கு வெட்டப்பட்ட நாள் அது. நம்மை யாராலும் அசைக்க முடியாதென்று தந்திரத் திரைக்குள் மறைந்து கொண்டு, மண் மக்களின் நெஞ்சைப் பிளந்து கொண்டிருந்த பலரின் முக மூடியைக் கிழிக்க ஓர் விடி வெள்ளி தோன்றிய நாள் அது.