பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

25



கோபச் சிரிப்பு

ழுத்துக்கள் ஒவ்வொன்றையும் எறியீட்டியாகவே கருதினான். போப்பின் ஆதிக்க வெறியைக் கண்டு கொதித்தது அவன் உள்ளம். கோபம் கொண்டன. அவனது அறிவுக் கண்கள். இதற்கு ஓர் முடிவே கிடையாதா ? என்று கோபாவேசங் கொண்டான். பார்க்கிறேன் ஒரு கை எனப் பார் முழுதும் முழக்கஞ் செய்தான். இவன் யார் பேதை, என்னை மதப்பிரஷ்டம் செய்ய.

"நான் ஜர்மன் நாட்டின் கெளரவக் குடியென்ற காரணத்தால் ஒப்புக்கொள்ளலாம். நான் ஓர் நல்ல கிருஸ்தவக் குடும்பத்தில் பிறந்தேன் என்ற காரணத்துக்காக இவனைப் பெரியவன் என்று ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அரசன், இவன் முன் அஞ்சலி செய்வதால், அவன் அரசாட்சிக்குட்பட்ட மக்கள் தொகையிலே நானும் ஒருவன் என்ற முறையிலே ஒப்புக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்! என் பெற்றோர்கள் ஒப்புக்கொண்டதால், அவர்கள் வழிவந்த நான் ஒப்புக்கொள்ளவேண்டிய சம்பிரதாயம் ஏற்படலாம், அரசியல் சட்டங்களோ, அல்லது சமுதாய சட்டங்களோ என்னை ஒப்புக் கொள்ளும்படி நெட்டித்தள்ளலாம், ஆனால் என் அறிவு இவனை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

என் அறிவு சொல்வழி நடப்பதன்றி அரசனே ஆணையிட்டாலும் அடிபணியமாட்டேன். இந்த