பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ச. பி. சிற்றரசு

43


பிராட்ரிக் மறைத்துவிட்டான் அதனால் அவ்வீரன் வெளியே வர அனுமதிக்கப்பவே இல்லை தன் அதிகாரத்துக்குட்பட்டுத் தனக்குச் சொந்தமான சாக்ஸன் நாட்டிலிருந்து ஒரு மலையில் ஒளித்து வைத்து விட்டான். லூதரின் துண்டித்த தலையைக் காட்டிப் பரிசுபெறக் காத்திருந்தவர்கள் துடியாய்த் துடித்தனர். ஒற்றர்கள் ஒரு பக்கம், போப்பின் கையாட்கள் ஒரு பக்கம், மதக் தலைவர்கள் ஒரு பக்கம், மார்க்க போகர்கள் ஒரு பக்கம் இரவும் பகலுமாகத் தேடியும் லூதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவனை யார் ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், விட்டேனா பார் என்றெல்லாம் வெத்து வேட்டுக் கிளப்பிப் பார்த்தான் மன்னன். இந்த நிலமைக்குப் பிறகுதான், லூதரின் நூல்களைப் படிக்கக் கூடாதென்று வைராக்கியத்தோடிருந்த மக்களெல்லாம் படிக்க ஆரம்பித்தார்கள்.

மதப் போர்

விவசாயிகள் உணர்ந்தனர். மதப் போர் ஆரம்பமாகியது. மதப் போர் உள்நாட்டுப் போராக மாறியது. தான் ஏற்படுத்திய மதத்தால் தனது நாட்டு மக்கள் இரு பிரிவினராக ஆயுதந் தாங்கிப் போர் நடத்துவதைப் பார்த்தான். உடன் மாற்றம் உள்ள மாற்றமாக இருக்கவேண்டுமென்று விரும்பினான். அமைதி தேவை என்றான் ஆனால்