பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிமேல் 49

வைத்த மோகம் போதும், போதும் என்று இப்போது 'ஆறுதல் பெறுகிருர் அபிராமிபட்டர். முன்பு துன்பத்திலே வேதனைப்பட்டவராதலின் இப்போது அதை நினைந்து, " அப்பாடி! இனி விட்டது இந்தச் சனியன்!’’ என்று சொல்வதுபோல இருக்கிறது.

அமையும் அமையுறு தோளியர்மேல்

வைத்த ஆசையுமே. ‘எம்பெருமாட்டியும் எம்பெருமானும் ஒருவராக வந்து தடுத்து ஆண்டுகொண்டு தம்பால் அன்பு கொள்ளும்படி செய்தார்கள். அந்த அன்புநெறியில் செல்வதனால் கிடைக்க வேண்டியவை யெல்லாம் கிடைக்கும். ஆதலின் வேறு மார்க்கங்களைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமே இல்லாமல் போயிற்று. இனி மீண்டும் இவ்வுலகில் வந்து பிறவாத இன்பத்தைக் காணியாகப் பெறுவது நிச்சயமாத லால் நம்மை ஈன்றெடுக்கும் தாய் ஒருத்தியும் இருக்கப் போவதில்லை; இதுகாறும் அல்லலுக்குக் காரணமாக இருந்த ஆசைகளும், அவற்றுள் வலியதான பெண்ணுசையும் இனிப் போதும் , போதும் என்று பாடுகிருர் இந்தப் பேரன்பர்.

உமையும் உமைஒரு பாகனும்

ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்குஅன்பு செய்யவைத் தார்; இனி எண்ணுதற்குச் சமயங் களும்இல்லை; ஈன்றெடுப் பாள்.ஒரு தாயும் இல்லை; அமையும், அமையுறு தோளியர்

மேல்வைத்த ஆசையுமே. (உமாதேவியும் அத்தேவியை ஒரு பாகத்தில் கொண்ட பரமசிவனும் ஒரே உருவத்தில் வந்து, ஒன்றுக்கும் பற்ருத

Lρπ 3ου- 4