பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவ அதிசயம் 87

(பலவகைச் செல்வமாக உள்ளவளே, அச்செல்வத் தால் நிறைவேறும் போகமே, அரிய போகங்களைத் துய்ப் பதல்ை வரும் மயக்கமே, அம்மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த ஞானமே, தாமரையாகிய இருக் கையில் எழுந்தருளிய தாயே, அடியேனது மனத்தில் மாயையிருள் சிறிதும் இல்லாமல் ஒழியச் சுடர்வீசும் பெரு வெளியாக இருக்கும் நின் திருவருள் எத்தகைய தென்று அடியேன் அறிய இயலவில்லை.) .

೩5 அபிர ாமியந்தாதியில் வரும் 36-ஆவது பாடல்.