பக்கம்:மாவிளக்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு ஒரு மணி 11 y

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மக்வில் தன்னைச் சோதனை செய்யாமல் விடமாட்டார் என்பதை நன்கு அறிந்திருந்த ஆண்டாள் மூர்ச்சைபோட்டு விழுவதாகப் பாவனே செய்தாள். சின்னசாமி எப்படியும் தன்னே மூர்ச்சை தெளிவிக்க வருவான் என்பதில் அவளுக்குச் சந்தேகமே இல்லை. அவன் தன்னக் கீழே விழாமல் பிடிக்க வந்ததும் ஆதரவுக்காக ஆண்டாள் அவனைப் பிடிப்பதுபோல் பாவனே செய்துக்கொண்டு மெல்லத் தன் மடியில் வைத் திருந்த கடிதங்களே அவன் சட்டைப்பையில் போட்டு விட்டாள். சின்னசாமி அவளே மூர்ச்சை தெளிவிக்க வேண்டும் என்று அதிலேயே கருத்தைச் செலுத்திக் கொண்டிருந்ததால் இதைக் கவனிக்கவில்லை ; கல்ல வேளேயாக அங்கே கிடந்த பெரிய சாய்வு நாற்காலி ஆண்டாளின் செய்கையை மக்வீலின் கண்களினின்றும் மறைத்துவிட்டது.

பிறகு எல்லாம் சுலபமாக முடிந்தன. மோட்டார் காரையும் ஆண்டாள் முன்னதாகவே தயாராக வர வழைத்திருந்தாள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/119&oldid=616228" இலிருந்து மீள்விக்கப்பட்டது