18 மா விளக்கு
" சின்னம்மா, இனிக் கவலையில்லை. அந்த வேலுச் சாமிக் கவுண்டனுக்குத் தகுந்த தண்டனே கிடைத்து விட்டது” என்ருன் முத்துசாமி.
' ஆமாம், கறுப்பண்ணசாமி சும்மா விடுமா ? இருந்தாலும் இப்போ நாம் அப்படிப் பேசப்படாது. அவருடைய தயவில்ைதான் இத்தனை காலமாக காங்கள் பிழைத்தோம்’ என்று சின்னம்மாள் ஆழ்ந்த சிந்தனை யோடு தெரிவித்தாள்.
“அவன் தயவிலா? அதெப்படி?” என்று ஆத்திரப் பட்டான் முத்துசாமி.
"உங்களைக் கேசிலே சிக்கவைத்தது அவர்தான். ஆல்ை, அப்புறம் என்னமோ அவருக்கு மனசு மாறிப் போய்விட்டது. கறுப்பண்ணசாமியை அவரும் தினமும் கும்பிடுவாரே, அந்த சாமிதான் அப்படிப் பண்ணி யிருக்கும். உங்கள் தகப்பனரும் குழந்தையும் பட்ட கஸ்டத்தைப் பார்த்துவிட்டு அவருக்கே விசனமாய்ப் போச்சு. நம்ம பையன் பேருக்கு மூணு ஏக்கரா கிலம் எழுதிக் கொடுத்துவிட்டார். அதை வைத்துத்தான் குடும்பம் சுகமாக இடக்குது.”
" மூணு ஏக்கரா எழுதி வச்சான அத்தனை இரக்கம் எப்படி வந்தது அவனுக்கு ?”
“ அவருக்கு திடீர்னு பக்கவாதம் வந்து படுகிடை யாக விழுந்துட்டார். அதெல்லாம் உங்களை ஜெயிலில் போட்டதினலே வந்த வினேதான் என்று அவர் சொல் லிக்கொண்டே இருந்தார். கறுப்பண்ணசாமி தண்டிச் சுட்டாறு என்று கினேச்சார் பக்கவாதம் சுகமால்ை