பக்கம்:மாவிளக்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் விஷயம் 69

போட்டால்தான் அந்தச் சுவையை அவர்கள் உணர முடியும். இதைத்தவிர வேறு உபாயத்தால் அவர்களே உணரச் செய்ய இயலாது. அதுபோலவே காதல் உணர்ச்சியைப் பெருதவனிடம் அதைப்பற்றிப் பேசி என்ன பலன் ? நான் படுகிற துன்பம் அவனுக்குக் கேலி யாகவே இருக்கும். அவன் எள்ளி கையாடும்போது இப்படிச் சில வேளைகளிலே கான் அவனிடம் கூறுவேன். அது அவனுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துவிடும். சரமாரியாக இன்னும் என்னென்னவோ பொழிந்து தள்ளத் தொடங்கி விடுவான்.

" ஏண்டா, நிலவின் ஒளி எப்போதுமே குளிர்ச்சி யாகத்தான் இருக்கிறது. காதல் பைத்தியங்களுக்கு அது தழல்போல இருக்கிறதாம். அது எப்படித் தழலாக முடியும் ? விஞ்ஞானம் கண்டறிந்த உண்மைக்கு அது முற்றிலும் மாறுபட்டிருக்கிறதே ?’ என்று சொல்லிக் கடகடவென்று சிரிப்பான்.

' விஞ்ஞானம் எல்லா உண்மைகளையும் கண்டு விட்டதோ ? உணர்ச்சியற்ற விஞ்ஞானத்தின் பிடியிலே காதல் அகப்பட்டு விடாது' என்று கான் காதலின் பெருமையைக் குறிப்பாகக் காட்டுவேன்.

ஆல்ை, இப்படி நகையாடிலுைம் எனது நண்பன் எழுதுகிற கதைகளெல்லாம் காதலேயே அடிப்படை யாகக் கொண்டிருக்கும். முத்துசாமி ஒரு சிறந்த சிறு கதை எழுத்தாளன். உணர்ச்சி பொங்கும் காதல் கவிதைகளும் இடையிடையே எழுதுவான். பேச்சுக் கலையில் அவனே யாரும் எளிதில் வென்றுவிட முடியாது. காதலேப்பற்றி அவனுடைய தனிப்பட்ட அக்தரங்கக்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/71&oldid=616130" இலிருந்து மீள்விக்கப்பட்டது