பக்கம்:மாவிளக்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஜமானி

குப்பையிலே கிடக்கும் அந்தப் பொம்மைக்கு சரோஜா கொடுத்த பெயர் முத்தி. சென்ற மாதம் வரை வீட்டில் வேலை செய்துவந்த பெண்ணுெருத்தியின் பெயர் முத்தம்மாள் என்பது. முத்தி என்று எல்லோரும் அவளேக் கூப்பிடுவார்கள். அவள் பல நாள் அங்கே வேலை செய்யவில்லை. வழக்கமாக அந்த வீட்டிற்கு வேலைக்கு வருகிறவர்களைப் போலவே அவளும் இரண் டொரு மாதங்களில் வேறிடம் தேடிக்கொண்டாள். அதற்கு மேலே அந்த வீட்டு அம்மாளுடைய கெடு பிடியை ஒருவராலும் தாங்க முடியாது.

முத்தம்மாள் பொறுமைக்காரி. அவளால்கூட அதைத் தாங்க முடியவில்லே. வீட்டு எஜமானியைப் போலவே எஜமானியின் மகள் சரோஜாவும் சூழ்நிலைக்கு ஏற்பப் பழக்கம் பெற்று வந்தாள். அவளும் முத்தியை அதிகாரம் செய்வதில் குறையவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/79&oldid=616146" இலிருந்து மீள்விக்கப்பட்டது