பக்கம்:மின்னல் பூ.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வண்ணப் பதுமை


வானத்து வில்லுக்கு மின்னல் பொடி தூவி
மந்திரச் சொக்கு மயக்கெலாம் கூட்டியே
தேனொத்த சோலத்தில் ஒப்பனை செய்தெழில்
சிற்பம் உயிர் பெற்றுத் தெருவில் மிதந்தொரு

காலத்தை வென்றநற் கவிதைக் கனவுருக்
காட்டிய தொப்பவே கன்னியும் தோன்றினாள்
ஆலத்தித் தட்டென உள்ளம் சுழன்றது;
அக்கணத் தேயனல் சூறையடித்தது.

“என்னை மறுத்திங்கு யாரை நினைத்தாலும்
இன்னுயிர் போக்குவன்” என்று முழங்கினேன்;
கன்னி சிரித்தனள்; கண்ணை மசக்கினள்;
கள்வெறி கொண்டு நான் ஆடிக் களித்தனன்:—

வெள்ளி நிலாவிலும் ஆற்றங் கரையிலும்
வெம்மை குளித்திடக் கண்கள் திறந்தன—
உள்ள மிலாஇவள் கட்டை. சிரிப்பெனும்
ஊளையிடும் வண்ணப் பொம்மை நடைப்பிணம்

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/102&oldid=1121441" இலிருந்து மீள்விக்கப்பட்டது