பக்கம்:மின்னல் பூ.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெ. தூரன் கவிதை நூல்கள்

1. இளந்தமிழா (ஐந்தாம் பதிப்பு) அமரத்துவம் வாய்ந்த கவிதைகள் பலவற்றைக் கொண்டது; என்று பாராட்டப் பெற்றது. டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சி முகவுரையுடன் கூடியது.

2. மின்னல் (மூன்றாம் பதிப்பு) உள்ளத்தில் எழுந்த கவிதை மின்னல்களாகிய மலர்களால் மாலையாக்கப்பெற்றது. திறனாய்வாளர்களின் பதிப்பைப் பெற்ற கவிதைகள் அடங்கிய தொகுப்பு.

3. நிலாப்பிஞ்சு (இரண்டாம் பதிப்பு)

‘பிஞ்சு நிலாக் கிண்ணியிலே
பெய்துவைத்தேன் கவியமுதம்’

என்று இதைப்பற்றிப் பாடியது மிகையாகாது. சிறந்த கவிதை நூல்.

4. பட்டிப் பறவைகள் ( மூன்றாம் பதிப்பு) பொங்கற் பரிசாக 1928ஆம் ஆண்டில் நண்பனுக்கு அளித்த சிறுசிறு கவிதை மணிகள். 1956-ல் முதன் முதலாக அச்சேறியவை. ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் செறிவுடையவை, இரவீந்திரநாத தாகூர் எழுதிய 50 கவிதைகளும் பெ. தூரரன் இயற்றிய 62 கவிதைகளும் கொண்ட தொகுப்பு

5. ஆனையும் பூனையும் (மூன்றாம் பதிப்பு) குழந்தைகளுக்கான இனிய பாடல்கள்.

6. நல்ல நல்ல பாட்டு (இரண்டாம் பதிப்பு) குழந்தைகளுக்கென்று எழுதப்பெற்ற கவிதைகளும் பாட்டுகளும், தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/113&oldid=1121458" இலிருந்து மீள்விக்கப்பட்டது