பக்கம்:மின்னல் பூ.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூன்றாம் பதிப்பின் முன்னுரை

இரண்டாம் பதிப்பின் பிரதிகள் அனைத்தும் செலவழித்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்குமென்று தோன்றுகிறது. சில சிறுசிறு மாறுதல்கள் செய்து வெளியிட வேண்டும் என்ற ஆவலால் அப்படியே நாள் தள்ளிக்கொண்டு வந்தது. எனக்கும் ஒழிவு கிடைக்கவில்லை.

அவ்வப்போது ஏதோ ஒரு கவிதையைச் சற்று பார்ப்பேன். இவ்வாறாக முழுவதையும் ஆராய இத்தனை காலம் கடந்து விட்டது.

மின்னல் ஒரு நொடிப்பொழுதில் பளிச்சிட்டு முடிந்து விடுகிறது. ஆனால் உள்ளத்து மின்னல் அவ்வாறல்ல. அது கவிதை வடிவம் பெறுவதற்கு நீண்ட நாள் ஆகும். உள்ளத்திலேயே அது ஊறிக்கொண்டிருந்து, ஏற்ற ஒரு யாப்பு வடிவில் உருவாக வேண்டும். இந்தக் கருத்தை விவரிப்பதற்கு இங்கு இடமில்லை. சுவைத் தேர்ச்சி பெற்ற நீங்களே உணர்ந்து கொள்ளலாகும்.

மின்னல் பூவைச் சுவைத்துப் பலர் எனக்குப் பாராட்டுக் கடிதங்கள் எழுதியுள்ளனர். பொதுவாக எல்லாருமே இதை வரவேற்றதற்கு இந்த மூன்றாம் பதிப்பே சான்று பகர்கின்றது.

அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.

பெ. தூரன்

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/14&oldid=1110317" இலிருந்து மீள்விக்கப்பட்டது