இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மழை முழுகிய தழைகள் அசையும்
பளபளப்பைப் பார்!
மாலை வானில் பரிதி வட்டத்
தகதகப்பைப் பார்!
குழையும் உளமும் தழைய இழையும்
குயிலின் நறவம் கேள்!
கோட்டுப் பூவில் சுருதி மீட்டும்
வண்டுக் கூட்டம் பார்!
குழவித் தென்றல் தழுவி யல்லி
முத்தங் கொஞ்சல் பார்!
குழலி லெங்கோ இடையன் ஊதும்
மதுவின் துளிகள் கேள்!
அழகின் தெய்வ நடன மிங்கே
ஆஹா பாரடா!
அவனி யிதுவே இன்ப உலகம்
அல்லல் ஏதடா?
ஓர் அழகிய மாலைப்பொழுது. மழை பெய்து அப்பொழுதுதான் ஓய்ந்தது. வானிலே கவிந்திருந்த மேகக் கூட்டங்கள்
17
மி.-2