பக்கம்:மின்னல் பூ.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருளில் மிதந்த நெஞ்சம்

வெட்டெனவே பேசாமல் வெம்புமுளம் விரிப்பதற்கும்

இசையைப்போல் வேறில்லை. என்றனுளம் அந்நிலையில்

கசிந்துருகிப் பண்ணொலியைக் கள்ளனெனத் தூற்றிடுமே.

நள்ளிருளில் உருமறைத்த நரகத்தின் துயர் இசையே
உள்ளத்தைச் சொல்லிவிட்டால் உற்றார் கடிவாறோ?
ஈரநெஞ்சம் அவர்க்கிலையோ? இருளும் அழு கின்ற திங்கே.

பேரறியாப் பேரவலம் பெருந்தூக்கத் தெல்லோரும்
செத்திருக்கும் வேளையிலே செறிந்தலிருட் பாங்கியுடன்

சித்தங் கலந்தாயோ தீராத் துயர்க் கொடியே?
தக்கவிடத் தும்பாதை தாண்டறியாக் குறுங்கொள்கை

மக்களிடை யுன்னுளத்தை மறைக்காமற் காட்டுதற்கு

ஒற்றைத் தனிச்சீவன் ஒருவருமே கிடையாதோ?

மற்றிங்கு நானுனக்காய் மாழ்குவதுங் காணாயோ?
கண்ணில் நான் படினுமென்றன் கண்ணீர் நீ உணர்ந்திடினும்

எண்ணத்தில் தூயவனென் றெவ்வாறு கண்டறிவாய்?

ஆளத்திப் பண்வீச்சில் அவலமெலாம் காரிருளின்
நீளத்தில் மிதந்ததனால் நெஞ்சம்சிறி தாறுவையோ?

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/27&oldid=1110652" இலிருந்து மீள்விக்கப்பட்டது