மாமரக் கன்னி
கன்னற் சுவை நாணக் கனியின்பம் தருதருவே!
ஆண்டுதொறும் எழிலிளமை அடைகின்ற மந்திரத்தை
ஈண்டெனக்குக் கூறாயோ? இதயம் நிறை காதலதோ?
இளவேனில் வரவு கண்டு மாமரம் புதிய எழில் கொள்ளத் தொடங்குகிறது. அந்தச் சமயத்திலே மாமரத்தைப் பார்ப்பதே ஓர் இன்பம்.
வசந்த சகன்- செந்தனுடைய தோழன், மன்மதன்.
மலையத்தே பெற்று வந்த தென்றல் தேர் - பொதிய மலையில் பெற்ற தென்றலாகிய தேர். மன்மதனுக்குத் தேர் தென்றல்.
வெள்ளோட்டம் - சோதனைக்காகத் தேரை முதன் முதலாக ஓடவிடுதல்.
சென்று வந்த குயிற் பாணன் -மார்க்காலத்திலே குயில் மறைந்து விடுகிறது; இளவேனிற் காலத்திலே மறுபடியும் அதன் இனிய குரல் கேட்கிறது. குயிலாகிய பாணன்.
ஆண்டுதொறும் எழிவிளமை அடைகின்ற மந்திரம்- மாமரமே, நீ ஆண்டுதோறும் புதிய இளமை பெறுகிறாய்; நான் ஆண்டுதோறும் முதுமை எய்திக்கொண்டே இருக்கிறேன். இளமை எய்தும் மந்திரத்தை எனக்குக் கூறமாட்டாயா? இதயத்திலே அன்பு நிறைகின்றபோது இளமையும் தானாகவே தோன்றிவிடுமா?
27