இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காதல்தேன் சுவைத்திட்ட காளைகன்னி யுள்ளம்
கனிந்திணைந்து பெருமின்பக் கவினுலகின் மேலே,
சாதல் எனும் இருட் கதவைத் தாண்டிப்பே ரின்பம்
சார்ந்திருப்போர் தனிஉலகத் தெல்லைக்கு மேலே,
பரவெளிக்கும் மேலாம் பாழ்வெளிக்கும் மேலே,
அரவணிந்த சங்கரனார் ஆடும் வெளிக் கப்பால்,
எல்லையெலாம் கடந்து நின்ற எல்லைக்கும் மேலே,
சொல்லினிலே கட்டுண்ணா எல்லைக்கும் மேலே,
கற்பனையின் மோனத்தில்
தற்பரனின் ஞானத்தில்
அற்பமெலாம் தள்ளியெழும்
நற்கருணைப் போதத்தில்
மேலுக்கும் மேலான மேலிடத்தே தோன்றும்
காலத்தை வென்றதொரு கவி எனக்கே தருவாய்.
35