பக்கம்:மின்னல் பூ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்பிக்கை


பொறு மனமே பொறு
இரு ளென்றும் நில்லாது
மறுகணமே ஒளி வரலாம்
பொறு மனமே பொறு

துன்பம் ஒரு முடிவில்லை
வெந்தழலில் துடிக் கின்றாய்
இந்தநிலை இன் றெனினும்
பொறு மனமே பொறு

கண் குழிந்து குருடானாய்
பண் ணிழந்த குழலானாய்
எண் ணிழந்த இடரெனினும்
பொறு மனமே பொறு

தளராதே திடங் கொள்வாய்
வளர் தீக்கும் முடிவுண்டு
புளிமாங்காய் தீங்கனியாம்
பொறு மனமே பொறு

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/40&oldid=1116721" இலிருந்து மீள்விக்கப்பட்டது