இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காந்தி அண்ணல்
இன்புற்று யாவரும் வாழ- உலகில்
இன்னலும் துன்பமும் இல்லையென்றோட
அன்பின் வலிமையைச் சொன்னான் - நல்ல
அஹிம்சை வழியினால் தீமையை வென்றான்
(சாந்தத்தின்)
அணுவைப் பெரும்படை யாக்கி- அதன்
அழிவுக் கொ டுமைகண் டஞ்சி யலறும்
மனிதக் குலத்தினை நோக்கி- உயர்
வாழ்வுக்கு மந்திரம் அன்பென்று சொன்னான்.
(சாந்தத்தின்)