பக்கம்:மின்னல் பூ.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காந்தி அண்ணல்


இன்புற்று யாவரும் வாழ- உலகில்
இன்னலும் துன்பமும் இல்லையென்றோட
அன்பின் வலிமையைச் சொன்னான் - நல்ல
அஹிம்சை வழியினால் தீமையை வென்றான்

(சாந்தத்தின்)


அணுவைப் பெரும்படை யாக்கி- அதன்
அழிவுக் கொ டுமைகண் டஞ்சி யலறும்
மனிதக் குலத்தினை நோக்கி- உயர்
வாழ்வுக்கு மந்திரம் அன்பென்று சொன்னான்.

(சாந்தத்தின்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/44&oldid=1116822" இலிருந்து மீள்விக்கப்பட்டது