இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்பத் தமிழின் சுவையே அமுதம்
எழில்சேர் கலையின் வடிவே அமுதம்
அன்புப் பணியால் மலரும் கண்கள்
அழகாய் வீசும் ஒளியே அமுதம்
துன்பந் தீர்க்கத் துணிவாய் நீளும்
தூய மலர்க் கரம் தீண்டுதல் அமுதம்
நன்பும் மகிழ்வும் எங்கும் பொங்க
நன்றே நாடும் இதயம் அமுதம்!
44