இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவள் பார்த்தாளோ
மாலையிலே காவிரியின் மணல் திட்டில் பாங்கியுடன்
சோலையில் போல் திரிந்தாள் சுரநாட்டு மகளவளும்
கரையழியா வகைக்காக்கும் காற்றிலசை நாணல்வளர்
ஒரு புதரில் இருந்தேநான் ஓயாமல் பார்த்திருத்தேன்-
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே.
இரவினிலே விளக்கணைத்து இன்துயிலுக் கேகிடுமுன்
விரிநிலவும் நாணிடவே வினைமுடித்த சாளரத்தே
எட்டியவள் பார்த்து நின்றாள்; ஏங்குமுளம் துடிதுடிக்க
நட்ட நடு வீதியிலே நானிருந்து பார்த்து நின்றேன்-
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே.
46