பக்கம்:மின்னல் பூ.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆகாய விமானம்


வானிடைப் பறத்தல் ஆ! வரம்பிலா இன்பம்!
சானிடர் தேவராய் வாழ நாம் படைத்தது
காற்றிடைப் பறந்தோம், கடல் மலை தாண்டினோம்;
நாற்றிசை மக்களும் நமர்எனக் காணுநாள்
அருகினில் இன்றே அணைந்ததென் றிருக்கப்
பெருமைசேர் விமானம் பெரும்புள் ளதனைக்
கூற்றினும் கொடியதோர் கூற்றுவ னாகவே
மாற்றினர் அந்தோ வையகம் நடுக்குற.
வானகத் திருந்து வாழ்வினைத் துணிக்கும்
சாவினைப் பொழிந்தனர்; துயரினைத் தூவினர்;
தேமழை பொழியும் திருவுடை விசும்பும்
தீமழை பொழியச் செய்தனர் தீமையோர்;
உற்றார் உறவினர் ஒருநொடிப் பிரித்தது;
கற்ற நம் வித்தை காலனாய் முடிந்தது.
என்றும் பிரியோம் என்றுநற் காதல்
அன்றுதான் பேசியோர் அக்கணம் பிரித்தது.
விண்ணிடை நீந்தும் வண்ணம் கண்டு
மண்ணிடைக் குதித்து மகிழ்ச்சியே பொங்க
அங்கை கொட்டி ஆர்த்திடும் சிறுமியைப்
பங்க முறவே பாதகம் பொடித்தது,
பரிதியைத் திங்களைப் பளிச்சிடும் மீன்களைத்
அரியநல் லாயிரம் உருவுகொள் முகிலைக்

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/50&oldid=1116839" இலிருந்து மீள்விக்கப்பட்டது