பக்கம்:மின்னல் பூ.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆகாய விமானம்

கண்டின் புறநற் ககனப் பரப்பினை
எண்ணவும் திடுக்கிடும் எனைதாய்ச் செய்தது.
இறகினைப் பெற்ற எறும்புதீப் புகுதல் போல்
சிறகினைப் பெற்றதே தீமையாய் முடிந்தது.
புட்பகம் தீநெறிப் போக்கிய ராவணன்
பட்டதோர் கதைதான் பாரறி யாததோ?
இன்பம் பயப்பதே இறைநெறி பிழைத்தால்
துன்பம் பயக்கவும் சூழ்ந்ததும் மானுடர்
அறிவினைச் சோதனைக் காக்கவே யன்றோ?
நெறியிதை உணர்ந்து நீக்குவோம் கொடுமையே.


இரண்டாவது உலகயுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் எழுதிய கவிதை இது.

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/51&oldid=1116850" இலிருந்து மீள்விக்கப்பட்டது