இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாள் முழுதும் பூ முழுகும் தும்பியை நீ வீடு சேர்ப்பாய்
சலித்த கூலிக்காரனை வேலையினின்றும் விடுவிக்கிறாய்
வானத்து மணி ஒன்று சாந்தி பொழிகின்ற தென்றால்
அது நீதான்.
உயர்ந்த வானிலிருந்து சாந்தியை அனுப்புகிறாய்
வானத்தின் உயிர்ப்பும் புருவமும்
கனங்கொண்ட காதலியின் உயிர்ப்பும் புருவமும்போல
இனிமையாக விளங்கும் காலத்தில் நீ தோன்றுகிறாய்
நிலத்திலிருந்து வாசனை யெழுந்து பரவுங் காலத்தில்
செழித்த வானத்திற்கு வருகிறாய்.
அப்பொழுது தொலைவில் வரும் மந்தைகளின் அரவம் கேட்கிறது
வேலை முடிந்து பாடும் குதூகலப் பாட்டின் இன்னிசை உலவுகிறது
கூரையின் மேல் அமைதியாகப் புகை சுருண்டு சுருண்டு எழுகிறது.
53