இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உடல் மெலிந்தேன் கண் குழிந்தேன்
ஊணுறக்கம் இல்லாமல்;
கொடியனையான் தனைக் கூவிக்
குமுறி உயிர் தான் விடுத்தேன்-
எனை யெரிக்கக் கொண்டு சென்றார்;
என் பிரிவைத் தோழி சென்றே
‘உனை நினைந்தே உள முடைந்தார்;
உயிர் துறந்தார்’ எனப் பகரப்
பெற்றோர்கள் செய்த பெரும்
பேதமையாம் காவல் விட்டு
முற்றாத இளமார்பை
மூடுகின்ற துகில் சேர
ஓடி வந்தாள்; விம்மி நின்றாள் -
‘உயிரனையா எழுக’ என்றாள்.
‘தேடரியாய், கண்ணிரண்டும்
தேம்பியதால் குருடா னேன்;
ஆதலினால் நானினி மேல்
அவனிதனில் வாழேனே.’
‘காதலனே, என்றனிரு
கண்ணீரால் ஆட்டியுன்றன்
56