இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கேட்டதும் கண்டதும்
அந்தியின் முன் வந்தமழை
ஆடிமலர் மரங்களெல்லாம்
கந்தமிருந் திளமை பொங்கக்
காணரிய பசுமைகொண்ட;
மைந்தன்கண்ட தெல்லா மவள்
மான்விழிக ளல்லால்இல்லை
(குயில்கூவும்)
எல்லா மவளாயிருந்தான்
எதுவு மவள் மயமானான்
சொல்லி லடங் காதவொரு
சுகமோங்க வான் மிதந்தான்
நல்ல மெய்ம்மைக் காதலதும்
நல்கு மின்பம் தெய்விகமே
(குயில் கூவும்)
62