பக்கம்:மின்னல் பூ.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இளமான்


உருவெடுக்கா துள்ளத்தில்
உதித்தவிந்த ஓவியமோ
ஒளியறியாப் பகற் பொழுதோ
ஊற்றில் லாப் பாழ்கிணறோ
தருவுடுக்கா மணற்பாழோ
தண்மையிலாக் கருநிலவோ
தமியேனின் வாழ்விதற்குச்
சாற்றிட வோர் உவமையுண்டோ ?
சிறகிழந்த இளம்புறவைச்
செந்தீயில் இட்டது போல்
சிறு தாலித் தளையிட்டுச்
சிறையிந்தமனை வைத்தார்;
நறவிழத்த சந்தனமாய்
நானுள்ளேன் இந்நாட்டு
நளாயினியை அருந்ததியை
நாளெல்லாம் எண்ணியெண்ணி:-
பிணிப்புண்ட மான்குட்டிட்ட
பேதையுளம் காலொடித்தேன்;
பெருகியெழும் கிளர்ச்சியனல்
பெண்மைநிறைக் கடலவித்தும்
மணத்தறியால் எனைக்கட்டி
வாழ்வொடித்தார் கிழக்குறட்டை

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/66&oldid=1117624" இலிருந்து மீள்விக்கப்பட்டது