இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அந்தியாள் கரும்பட்டு மெல்ல உடுத்துகிறாள்
அரக்கு நிற முன்றானை
அடிவானில் மேற்கே பார்
சந்தனமும் செம்பவளம் கலந்திருந்த வானமதில்
சன்னமாய்க் கருஞ்சிவப்பும்
சாம்பல் நிறம் கண்டதங்கே
செம்பும் தனித்தங்கத் திட்டை படுக்குகளும்
தீயர்மனக் குகை போலச்
செம் மயிழந் திருண்டனவே
பம்பிமிக மரங்களவை படைவீடாய்க்காரிருளும்
பட்டிமையில் எட்டிஎட்டிப்
பார்க்கின்ற வேளையதில்
சிறுமொட்டைக் குன்றத்தின் உச்சியிலே நின்றிருந்தேன்
திரளுமிருட் படலங்கள்
செறிந்துவலம் மறைந்ததுவே
உறையிட்ட மையிருட்டில் நெஞ்சுமொரு சூனியமாய்
உதிர்ந்து பரத் தொன்றிடவே
ஊமையெழுத் துட்பொருளாம்
68