இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அந்தி
அண்டத்து மர்மமெலாம் வெளியாகும் சூழ்ச்சியினை
அங்கு நான் கண்டறிந்தேன்
ஆஹா ஹா அதுவன்றோ
வண்டுக்குச் சிக்காமல் வளர்கின்ற தூய்மைநிறை
மனப்பூவால் எம்மிறையை
வழுத்திடவே ஏற்ற கணம்?
சிறிய குன்றின் உச்சியில் நின்று உலகில் மாலையில் இருள் பரவுகின்ற காட்சியை நோக்குவது ஒரு தனி இன்பம். அவ்வேளையில் உள்ளம் இயற்கையோடு ஒன்றி விடுகின்ற உணர்ச்சி இயல்பாக எளிதில் வாய்க்கின்றது. இது கிடைத்தற்கரிய சிறந்த போகும்.
- பட்டிமை-வஞ்சகம்
- ஊமையெழுத்து - ஓம் எனும் பிரணவம்.
69