பக்கம்:மின்னல் பூ.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

“என்ன வாழ்வடா இது? எப்பொழுதும் ஒரே அவசர ஓட்டம். அமைதியாக நின்று உற்றுப் பார்க்கக்கூட நேரமில்லாத வாழ்வு-“ இவ்வாறு ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஹென்ரி டேவீஸ் ஒரு கவிதையிலே அங்கலாய்க்கிறார். அவர் மேலும் கூறுகிறார்: “இயற்கையிலே எத்தனையோ அழகுகள் காணப்படுகின்றன. அவற்றைப் பார்க்க நமக்கு நேரமில்லை. எழில் மங்கையின் கண்களிலே முறுவலின் ஒளி கிளம்புகிறது. அந்த முறுவலுக்கு அவளுடைய இதழ்கள் அழகு கொடுக்கப் போவதைக்கூடப் பார்க்க நமக்கு நேரமில்லை. என்ன வாழ்வடா இது?”

வாழ்க்கை அவசரக் கோலமாக மாறிக் கொண்டிருக்கிறது. கவிஞன் வடித்துத் தருகிற கவிதையை நிதானமாகப் படித்து அனுபவிப்பதற்கும் நேரங்கிடைப்பது அரிதாகிவிட்டது.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/7&oldid=1110303" இலிருந்து மீள்விக்கப்பட்டது