இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறை குடம்
பிடிபட்டு வாழ்வெல்லாம் பித்தனாய்த் திரிந்துழன்று
உற்றாரைத் தான் மறந்தான்; ஒருகுழந்தை யது மறந்தான்;
மற்றவனும் கைபிடித்த மனையாட்டி தனைமறந்தான்
பொன்கொடுத்த தெய்வத்தைப் பொழுதோடே தான் மறந்தான்.
கண்ணெலாம் குறைகுடத்தில் கவலையே வாழ்வாக
வறுமையினும் தெளிவுடையோர் மனத்துலவும் சாந்தி யின்றிக்
குறைகுடமும் நிறையாமுன் நிறைந்ததவன் காலமிங்கே.
74