பக்கம்:மின்னல் பூ.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறை குடம்

பிடிபட்டு வாழ்வெல்லாம் பித்தனாய்த் திரிந்துழன்று
உற்றாரைத் தான் மறந்தான்; ஒருகுழந்தை யது மறந்தான்;
மற்றவனும் கைபிடித்த மனையாட்டி தனைமறந்தான்
பொன்கொடுத்த தெய்வத்தைப் பொழுதோடே தான் மறந்தான்.
கண்ணெலாம் குறைகுடத்தில் கவலையே வாழ்வாக
வறுமையினும் தெளிவுடையோர் மனத்துலவும் சாந்தி யின்றிக்
குறைகுடமும் நிறையாமுன் நிறைந்ததவன் காலமிங்கே.

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/74&oldid=1121386" இலிருந்து மீள்விக்கப்பட்டது