இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிங்கநாதம் செய்யடா
சேர்ந்தெழுந்தே நில்லடா;
விம்மும் தோளைப் புடையடா
வெல்கதாய் எனக் கூவடா
(சிம்ம)
அன்னை சக்தியின் ஆற்றல் பெற்றோம்
அண்டம் பேர்க்கும் மூச்சுக் கொண்டோம்;
முன்னை உலகம் கண்டிராத
மொய்ம்பு வீரம் பெற்றுவிட்டோம்
(சிம்ம)
பார தத்தாய் ஏற்றம் பெற்றே
பாரின் உயிராய்த் திகழ வைப்போம்;
மாரு தத்தைப் போல ஓயா
வாழ்க்கை வேகம் தாங்கி நிற்போம்
(சிம்ம)
ஜாதி பேதம் பொருளின் பேதம்
சமய பேதம் தள்ளி யென்றும்
நீதியொன்றே நினைவு மொன்றே
நேர்மையொன்றே ஆக்குவோம்!
(சிம்ம)
அறிவின் ஆட்சி எங்கும் நிலவ
அன்பின் ஆட்சி எங்கும் பொங்க
சிறுமை வீழப் புவனம் ஓங்க
செயல் புரிந்தே வாழுவோம்!
(சிம்ம)
- குடியரசுத் திருநாளன்று பாடியது.
76